Friday, November 27, 2009

இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்



வலைதள அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்
>

Saturday, November 14, 2009

பொய்களை கவிதைகளாக எழுத வேண்டாம்



"கவிதைக்கு பொய்அழகு" என்று எழுதிய நம்ம வைரமுத்து சார் இப்போ எப்படி பேசியிருக்கிராருன்னு பாருங்க :-

பெங்களூர், நவ. 13: பொய்களை கவிதைகளாக எழுத வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டார்.


பெங்களூர் பிரசிடென்சி கல்லூரி கன்னடப் பேராசிரியை மலர்விழி, வைரமுத்துவின் கவிதைகளில் பிரபலமான ஒரு நதியின் விதி, இலை, இசை உள்ளிட்ட 33 கவிதைகள் மற்றும் கதைகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தின் கன்னட சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்த புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் கன்னடத்தில் பேசி அனைவரையும் வரவேற்றார் கவிஞர் வைரமுத்து. பிறகு அவர் தமிழில் பேசியதாவது:

இன்று கன்னடத்து தோழர்களுக்கும் தமிழ் தோழர்களுக்கும் மகுடம் சூட்டும் நாள். இவ்விழாவின் கதாநாயகி மலர்விழி, கன்னடத்தில் மொழிபெயர்த்த எனது கவிதைகள் நம்மை இங்கு சேர்த்துள்ளன.

தமிழின் சங்க இலக்கியங்களை மொழிபெயர்க்க மலர்விழி விருப்பம் தெரிவித்துள்ளார். அதை மொழிபெயர்க்க ஆகும் செலவை வைரமுத்து அறக்கட்டளை ஏற்கும்.

நமக்குள் பேதமில்லை. திராவிடக் குழந்தைகள். ஒரே வேரிலிருந்து வந்தவர்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது.

எனது இதயப் பையை நிரப்புவதற்காக கவிதைகளையும், எனது பணப் பையை நிரப்புவதற்காக அதாவது வயிற்றுப் பிழைப்பிற்காக திரைப்படப் பாடல்களையும் எழுதுகிறேன் என்றார்.

பெங்களூர் தமிழ்ச்சங்கத்திற்கு வந்த வைரமுத்து, அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: நான் வருவதற்கு தேதி கேட்டு வாங்கிய முக்கிய இடம் பெங்களூர்த் தமிழ்ச்சங்கம். கவிஞர்களுக்கு நான் சொல்வது, பொய்யை எழுத வேண்டாம். உங்களது கவிதைகள் இதயத்தில் இருந்துவரும் உணர்ச்சியாக இருக்க வேண்டும். அதுவே நிலைத்து நிற்கும். தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

நன்றி : தினமணி
>

Monday, November 9, 2009

ஓய்வு-கவிதை



ஓய்வு?

இன்று
வாழ்வின் தொடக்க நாள்
வேலையிலிருந்து ஓய்வு பெரும் நாள்!

இனி
அலார ஒலி கேட்டு அலறி விழிக்காமல்
சேவலின் கூவலுக்காய் செவிகள் காத்திருக்கலாம்

கோப்புகளை மறந்துவிட்டு
கோப்பைத்தேநீரை ரசித்துப் பருகலாம்
அவசரமாய் ஓடிய வீதிகளில்
அன்னத்தின் நடை பழகலாம்
கணக்குகள் பார்த்து தளர்ந்த
கண்கள் இனி பூக்களில் இமை விரிக்கலாம்
மேல் நோட்டம் விட்ட
கவிதைகளில்
ஆழாமாய் மனம் பதிக்கலாம்

விடுப்பில்லா காரணத்தால்
வில்லை கொண்டு விரட்டிய
காய்ச்சலை ,இல்லாளின்
கஞ்சிக்காய் சிறிதே அனுபவித்து மீளலாம்!

எத்தனை முடிகள் நரை கொண்டன,
எத்தனை சுருக்கங்கள் முகம் கொண்டது
நிதானமாய் கணக்கிடலாம்.
திண்ணையோரம்
உண்ணவரும் காகங்களை
நலம் விசாரிக்கலாம்

எறும்புகளின் பாதை
பேத்தியின் மழலை
கதவோர பல்லிச்சத்தம்
சூரியப் புலர்வு
பொறுமையாய் ரசிக்கலாம்

கனவுகளோடு கலந்திருந்த
அம் மனிதரை
கலைத்தது அவசரமாய்
மனைவியின் குரல்
"வேலை மற்றொன்றை தேடுங்கள்
வெட்டியாய் பொழுது போக்காது"

(சு.கலைமதி அவர்கள் கவிதை, நாளதுவரை)

நான் வாசித்த கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று)
>

Saturday, November 7, 2009

இரண்டு இயலாதவர்களில், யார் ஆண்டால் என்ன?

தமிழகம்
எத்தனையோ  ஆட்சியை கண்டுவிட்டது, எத்தனையோ முதல்வர்களை பார்த்துவிட்டது., அனால்  தமிழகத்திற்கென்று அன்றுதொட்டு இன்றுவரை
காவேரி பிரச்னை., இலங்கை பிரச்னை, மின்வெட்டு (தற்போது முல்லைப்பெரியாறு)
என்று சில பிரச்னைகள் , தீராத பிரச்சனைகளாகவே  இருந்துவருகிறது.,
அரசியல் கட்சி தலைவர்கள் ஆட்சிக்கு வரும் வரை 'நான் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்னையை தீர்த்து வைப்பேன், இலங்கைப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் ' என்றெல்லாம் சவால் விட்டு, ஆட்சியில் அமர்ந்தபின்னர் வாகாக மறேந்தே போய்விடுகின்றதை., நாமும் பார்த்துப்பார்த்து  சலித்து விட்டோம் , அதன் தொடர்பில் இன்று தினமலரில் வந்த ஒரு வாசகரின் கடிதம் உங்கள் பார்வைக்கு.
 ------------------------------------------------------------------
யார் ஆண்டால் நமக்கு என்ன? கே.அருண்குமார், பல்லடத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்திற்கென்று சில பிரச்னைகள் இருக்கின்றன. அவை, யாராலும் தீர்க்க முடியாத பிரச்னைகளாக இருந்து வருகின்றன. முதலில், காவிரி பிரச்னை. "நடந்தாய் வாழி காவேரி, வான் பொய்ப்பினும் தான் பொய்யாத பொன்னி, பொய்யாதளிக் கும் பொன்னி' என்றெல் லாம் நாம் இலக்கியத்தில் படித்து மகிழ மட்டுமே முடியும். நம் அரசியல்வாதிகள், இடையில் ஆயிரக்கணக் கான லாரிகளில், காவிரி மணலைத் தோண்டி எடுத்து விற்று வருவதால், மணலுக்கு அடியில் உள்ள மண் தரை மேலே தெரிகிறது. அதில் செடி, கொடி, மரம் எல்லாம் முளைத்து, அது ஒரு ஆறு என்ற அடையாளமே காணாமல் போய் விட்டது. அடுத்து முல்லைப் பெரியாறு பிரச்னை. இதில், சுப்ரீம் கோர்ட் உத்தரவையே கூட, காலில் போட்டு மிதிக்கும் கேரள அரசு, அதைக் தட்டிக் கேட்கக் கூட துப்பில் லாத மத்திய, மாநில அரசுகள். இதையடுத்து, இலங்கைத் தமிழர் பிரச்னை. அங்கே என்ன நடக்கிறது என்பது, மக்களுக்கும் தெரியவில் லை; அரசுக்கும் தெரியவில்லை. அடிக்கடி மக்கள் செலவில், தூது போய் வந்து பாவ்லா காட்டுகின்றனர். மின்வெட்டு, இது ஒரு தீராத பிரச்னை. தீர்க்க முயல்கின்றனர்; ஆனால், தீர்ந்த பாடில்லை. இந்த நிலையில், தமிழகத்தை கருணாநிதி ஆண்டால் என்ன; ஜெயலலிதா ஆண்டால் என்ன? இதுவரை ஒரு கட்சி கோலோச்சி பெட்டிகளை நிரப்பியது. நாளைக்கு, பெட்டிகளை ஜெயலலிதா நிரப்பிக் கொள்ளட்டுமே! அந்தக் கட்சித் தொண்டர்களும், கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகட்டுமே! இரண்டு இயலாதவர்களில், யார் ஆண்டால் என்ன?

---------------------------------------------------------------------
என் குறிப்பு:-
என்ன வலை நண்பர்களே?
அவர் உண்மையில் வெறுத்துப்போய் எழுதியிருந்தாலும், இவருக்கு அவர் தேவலை
என்று தான் மக்கள் வாக்களிக்கின்றனர்.,
தன்னலமில்லா மக்களுக்காக உண்மையிலேயே உழைத்த கர்மவீரர் காமராஜர் போன்ற நல்ல தலைவர்களும் நமது தமிழ்நாட்டில் தான் பிறந்தார், வாழ்ந்தார்
என்பதை   நினைத்து பெருமை கொள்கிறோம்., இனி அப்படிப்பட்ட தலைவர்கள் நமக்கு கிடைப்பார்களா? காலம் தான் பதில் சொல்லும்.
மக்கள் பணி ஒன்றே நினைத்து உழைத்த கர்மவீரர் எங்கே?
கோடிகளில் புரளும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே?
எல்லாமே வியாபாரமாகவும், லாப நோக்கோடும் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில்
அது அரசியலையும் விட்டுவைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
அனால் பாதிப்பு அடைவதேன்னவோ நாம் தான்.
>

Thursday, November 5, 2009

நம்மால் முடியும்... ஆனால், ஏன் முடியவில்லை?




இன்று ஒரு வாசகர் கருத்து படித்தேன், அது எவ்வளவு உண்மை, படித்து பாருங்களேன்.
நம்மால் முடியும்... ஆனால், ஏன் முடியவில்லை? "உலகில் உள்ள மிகச்சிறந்த முக்கியப் பல்கலைக் கழகங்களில், "ஹார்வர்ட்' பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது; முதல் நூறு இடங்களுக்குள், இந்தியக் கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை' என, டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் சர்வே வெளியிட்டுள்ள செய்தி, கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கூடம் கூட, 30வது இடம் பெற்று பெருமை தேடிக் கொண்டுள்ளது. ஆனால், உலகின் மிகச்சிறந்த கல்வியாளர்களை, வல்லுனர்களைக் கொண்ட இந்தியா, பின்தங்கிப் போனது ஏன் என்பது, ஆராயப்பட வேண்டும். இன்று உலகக் கோடீஸ்வரர் பட்டியலில், முதல் நூறு இடங்களில், இந்தியர்கள் பலர், கணிசமான இடங்களைப் பெற்றுள்ளனர்; சந்தோஷமான விஷயம் தான். ஆனால், கல்வி நிறுவனங்கள் என்று வரும் போது, நூற்று க்குள் இடம் பெற முடியாமல் இருப்பது, மிகப்பெரிய கவலை அளிக்கக்கூடிய விஷயம்! "இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் வியத்தகு பாதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது' என்று பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால், இரண்டாவது முறை தொடர்ந்து பிரதமராகப் பதவி வகிக்கும் தன் காலத்தில், இந்தியக் கல்வி நிறுவனங்கள் கீழ்நோக்கிப் போய்க் கொண்டுள்ள நிலை கண்டு என்ன சொல்லப் போகிறார்? எல்லா இயற்கை வளங்களையும், மனித வளத்தையும் கொண்ட எழில்மிகு இந்தியாவில், கல்வி நிறுவனங்கள் இன்று கடைசிக்குத் தள்ளப்பட யார் காரணம்? உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களை உருவாக்கிக் காட்ட, எல்லா அம்சங்களும், சூழ்நிலைகளும் இருந்தும், பின்தங்கிப்போவது ஏன் என்று புரியவில்லையே? நம்மால் முடியும்! ஆனால், ஏன் முடியவில்லை என்பது தான் கவலைக்கிடமான கேள்வி.

-எம்.முகம்மது அனீஸ், பனைக்குளம்(நன்றி-தினமலர்)
>

Wednesday, November 4, 2009

மகள் பிறந்த நாளும், நினைவுகளும்

மலருக்கு பிறந்த மலர் நீ !

முதல் மகளாய் பிறந்ததாலோ
எல்லாவற்றிலும் முதலாவதாக.
உன் முயற்சியின் பலனெல்லாம்
முன்வந்து மகுடம் சூட்ட
இறைவன் என்றும் துணையிருக்க
எதிர்காலம் உன்கையில் முன்னேறு முழு மூசசாய்.


போட்டாபோட்டி ,பொறாமை 
பள்ளியில் மட்டுமல்ல 
பொதுவாய்  உலகில்.
போராட...
மனவலிமை,முயற்சி ,உழைப்பு மட்டும்  போதாதம்மா.
மேலாய் ...
சோர்வு தரா, உடல் வலிமை கூடிடவே  
வெற்றி உன் பக்கம் நிற்கும்.
அம்மாவிற்கு நன்றி சொல்லு 
அனைத்து பலமும் சேர்ந்து கிடைக்கும்
    
நினைத்துப்பார்க்கிறேன்...
அன்று
மார்கழி மாதம் , சன்னலோர துணித்தொட்டில்
ஒய்யாரமாய் தூங்கும்
என் செல்வம்
முதன்முதலாய் பார்த்தேன்
கடல் கடந்து ஒடுபவனுக்கு
களைப்பாரல்-உன் முகம்
சின்னஞ்சிறு பொன்மலர்
செம்பவழ வாய் மலர் சிந்திடும்
அழகே ஆராரோ
தாலாட்டு பாடியது மனது.


பேர் வைக்கும் நாளன்று
அத்தனை பாட்டன்கள், பாட்டிகள்,அம்மாக்கள்
மலராக உனை தூக்கி,மடிமேல் வைத்து
தேன் தடவி வாழ்த்தி மகிழ
அன்னையின் முகச்சிகப்பு-பூரிப்பு?

ஒரு வயசில்..
நீ தரும் முத்தமும்
நீ பேசும் மழலையும்
உன்னை விட்டு அகலவிடா.
என்ன செய்ய ?
எல்லோரையும் போல
பரம்பரை பயண வாழ்க்கை
பிரித்துப்போட்டு பார்த்தது


புகைப்பட சிரிப்பிலும்
போன் குரல் பேச்சிலும்
பிள்ளை உன்னைக்கண்டு மகிழும் மனசு.
வருடம் 'ஒரு மாதம்" என
கணக்கு வைத்து தரும் லீவில்
அன்னையும், உன்னையும்
காணுகின்ற நாளில்
பிரிவின் துயரம்
மறந்தல்ல.. பறந்தே போகும்.


மீண்டும்..
பிரிந்து விடைபெறும் போது
வெற்றிடமாகும் மனதுடன்,உலகும்.
சக்கரம் போல் சுழன்று கொண்டே
பணி சென்றாலும்
அடுத்த விடுமுறை நினைத்தே... மனதிருக்கும்
அன்பினை காண ஆவலாய்.


வருடம் கூடி
வயது கூடுவது
கணக்கிற்கு தானம்மா.. நீ
என்றுமே குழ்ந்தை  தான் எங்களுக்கு.


எங்களின் கனவை
நினைவாக்கும்
பண்பு
இயற்கையாய் உன்னிடத்தில்
பெருமை தான் மகளே!
வாழ்க!...வாழ்த்துகிறேன்.
-இன்று உன் பிறந்த நாள்..
Happy birthday.... By Daddy




>