Wednesday, November 4, 2009

மகள் பிறந்த நாளும், நினைவுகளும்

மலருக்கு பிறந்த மலர் நீ !

முதல் மகளாய் பிறந்ததாலோ
எல்லாவற்றிலும் முதலாவதாக.
உன் முயற்சியின் பலனெல்லாம்
முன்வந்து மகுடம் சூட்ட
இறைவன் என்றும் துணையிருக்க
எதிர்காலம் உன்கையில் முன்னேறு முழு மூசசாய்.


போட்டாபோட்டி ,பொறாமை 
பள்ளியில் மட்டுமல்ல 
பொதுவாய்  உலகில்.
போராட...
மனவலிமை,முயற்சி ,உழைப்பு மட்டும்  போதாதம்மா.
மேலாய் ...
சோர்வு தரா, உடல் வலிமை கூடிடவே  
வெற்றி உன் பக்கம் நிற்கும்.
அம்மாவிற்கு நன்றி சொல்லு 
அனைத்து பலமும் சேர்ந்து கிடைக்கும்
    
நினைத்துப்பார்க்கிறேன்...
அன்று
மார்கழி மாதம் , சன்னலோர துணித்தொட்டில்
ஒய்யாரமாய் தூங்கும்
என் செல்வம்
முதன்முதலாய் பார்த்தேன்
கடல் கடந்து ஒடுபவனுக்கு
களைப்பாரல்-உன் முகம்
சின்னஞ்சிறு பொன்மலர்
செம்பவழ வாய் மலர் சிந்திடும்
அழகே ஆராரோ
தாலாட்டு பாடியது மனது.


பேர் வைக்கும் நாளன்று
அத்தனை பாட்டன்கள், பாட்டிகள்,அம்மாக்கள்
மலராக உனை தூக்கி,மடிமேல் வைத்து
தேன் தடவி வாழ்த்தி மகிழ
அன்னையின் முகச்சிகப்பு-பூரிப்பு?

ஒரு வயசில்..
நீ தரும் முத்தமும்
நீ பேசும் மழலையும்
உன்னை விட்டு அகலவிடா.
என்ன செய்ய ?
எல்லோரையும் போல
பரம்பரை பயண வாழ்க்கை
பிரித்துப்போட்டு பார்த்தது


புகைப்பட சிரிப்பிலும்
போன் குரல் பேச்சிலும்
பிள்ளை உன்னைக்கண்டு மகிழும் மனசு.
வருடம் 'ஒரு மாதம்" என
கணக்கு வைத்து தரும் லீவில்
அன்னையும், உன்னையும்
காணுகின்ற நாளில்
பிரிவின் துயரம்
மறந்தல்ல.. பறந்தே போகும்.


மீண்டும்..
பிரிந்து விடைபெறும் போது
வெற்றிடமாகும் மனதுடன்,உலகும்.
சக்கரம் போல் சுழன்று கொண்டே
பணி சென்றாலும்
அடுத்த விடுமுறை நினைத்தே... மனதிருக்கும்
அன்பினை காண ஆவலாய்.


வருடம் கூடி
வயது கூடுவது
கணக்கிற்கு தானம்மா.. நீ
என்றுமே குழ்ந்தை  தான் எங்களுக்கு.


எங்களின் கனவை
நினைவாக்கும்
பண்பு
இயற்கையாய் உன்னிடத்தில்
பெருமை தான் மகளே!
வாழ்க!...வாழ்த்துகிறேன்.
-இன்று உன் பிறந்த நாள்..
Happy birthday.... By Daddy




>

1 comments:

thiyaa said...

அருமை வாழ்த்துகள்

Post a Comment