Monday, November 9, 2009

ஓய்வு-கவிதை



ஓய்வு?

இன்று
வாழ்வின் தொடக்க நாள்
வேலையிலிருந்து ஓய்வு பெரும் நாள்!

இனி
அலார ஒலி கேட்டு அலறி விழிக்காமல்
சேவலின் கூவலுக்காய் செவிகள் காத்திருக்கலாம்

கோப்புகளை மறந்துவிட்டு
கோப்பைத்தேநீரை ரசித்துப் பருகலாம்
அவசரமாய் ஓடிய வீதிகளில்
அன்னத்தின் நடை பழகலாம்
கணக்குகள் பார்த்து தளர்ந்த
கண்கள் இனி பூக்களில் இமை விரிக்கலாம்
மேல் நோட்டம் விட்ட
கவிதைகளில்
ஆழாமாய் மனம் பதிக்கலாம்

விடுப்பில்லா காரணத்தால்
வில்லை கொண்டு விரட்டிய
காய்ச்சலை ,இல்லாளின்
கஞ்சிக்காய் சிறிதே அனுபவித்து மீளலாம்!

எத்தனை முடிகள் நரை கொண்டன,
எத்தனை சுருக்கங்கள் முகம் கொண்டது
நிதானமாய் கணக்கிடலாம்.
திண்ணையோரம்
உண்ணவரும் காகங்களை
நலம் விசாரிக்கலாம்

எறும்புகளின் பாதை
பேத்தியின் மழலை
கதவோர பல்லிச்சத்தம்
சூரியப் புலர்வு
பொறுமையாய் ரசிக்கலாம்

கனவுகளோடு கலந்திருந்த
அம் மனிதரை
கலைத்தது அவசரமாய்
மனைவியின் குரல்
"வேலை மற்றொன்றை தேடுங்கள்
வெட்டியாய் பொழுது போக்காது"

(சு.கலைமதி அவர்கள் கவிதை, நாளதுவரை)

நான் வாசித்த கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று)
>

3 comments:

கலையரசன் said...

எனக்கும் பிடிச்சிருக்கு...

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

மலரகம்(நாகங்குயில்) said...

நன்றி கலை அரசன் சார்
இப்போ word verification சரிஆக்கிட்டேன் உங்களின் யோசனை படி
மிக்க நன்றி

Post a Comment