Saturday, October 10, 2009

புகைப்படங்களும், நினைவுகளும்











நினைத்துப்பார்க்கிறேன்
கல்லூரி
மற்றும் கல்லூரி விடுதி நாட்களை
படிக்க மட்டுமின்றி , பழக எத்தனை எத்தனை நண்பர்கள்
சினிமா , விழாக்கள், அரட்டை, டியுஷன் என்று
கலகலப்பாய் கவலையின்றி சென்ற நாட்கள் அவை.
திரும்ப வராதா என்று ஏக்கம் தரும் இன்றும்.


நான்கு வருடம் போனதே தெரியவில்லை,அன்றாடம் நண்பர்களுடன் பேசிக்கொண்டே, ஏதாவது விளையாடிகொண்டே., பரீட்சை நேரங்களில் படித்துக்கொண்டே
ஒவ்வொரு வருடமும் முடிந்து ., கல்லூரி மறுபடி திறக்கும் வரை என்று போனது.



படிப்பு முடிந்து ., பிரியும் நேரம் வந்தபோது
எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆட்டோகிராப் வாங்கி (அதில் அறிவுரை வேறு) "பசுமை நிறைந்த நினைவுகளே , பாடித்திரிந்த பறவைகளே" என்று கண்ணாதாசனின் பாடல் கேட்டு ,பிரிந்து, வீடு வந்து சேர்ந்து., பட்டம் வாங்கி , பயணம் சென்று , பணியில் சேர்ந்து , மனைவி , மக்கள் என்று குடும்பமாகி வாழ்க்கை வேறு திசையில் பிள்ளைகளுக்கென்று சென்று கொண்டு இருக்கும் இந்த நிலையில்,அன்று பழகிய நண்பர்கள், எங்கே ? எப்படியோ ? என்று எண்ணாத நாளில்லை.

இன்று கல்லூரியில் படிக்கும் இளையர்கள் .,ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள் படிப்பு முடிந்து பிரியும் பொது எல்லோரது கைத்தொலைபேசி , மின் அஞ்சல் முகவரி, facebook, tweeter என்றெல்லாம் நட்பை

தோடர்கின்றனர் என்பது சந்தோசம் தான்.

அப்போது எங்களுக்கு அந்த வசதிகளில்லை என்று இன்று எண்ணும்போது வருத்தம் தான் மிஞ்சுகிறது.
அன்றைக்கு எங்களுக்கு வூர் முகவரி மட்டும் தான், எல்லோரது ஆட்டோகிராப் கிடைக்கும் ., அதுவும் தொலைந்து
போனால் தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.
என்றாவது எப்போதாவது , நேரடியாக சந்தித்தால் தான் உண்டு.

அப்படி விட்டுப்போன நண்பர்களை தொடர்புகொண்டு அளவளாவ மனது
ஏங்கும் நேரமெல்லாம்., பழைய குழு புகைப்படங்களை பார்த்து ஆறுதலடைகிறேன்.


(அது சரி எல்லோரும் செய்றது தானே? இது என்ன மொக்கை பதிவு தானே என்று
நீங்கள் மனசுக்குள் சொல்வது புரியுது ., மேட்டர் கிடைக்கலை , அதான் இதையும்
எழுதிவிடுவோமேன்னு .. ஹி..ஹி )


>

0 comments:

Post a Comment