Tuesday, October 20, 2009

தமிழக எம்.பிக்கள் பயணமும்-இலங்கையின் அழுத்தமும்

திமுக , காங், விடுதலைச்சிறுத்தைகள் எம் பி க்கள் குழு இலங்கை சென்று வந்த பயணம் பற்றி பலவாறு செய்திகள் வருகின்றன.
ஆளும் கட்சியை சேர்ந்த இவர்களும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் மாறி மாறி
கருத்துரைப்பது பட்டிமன்றமே தோற்றுவிடும் அளவிற்கு சரி , தவறு என்று பேசிக்கொண்டே இருக்கின்றனர். இந்த பயணத்தினால் என்ன நன்மை?
இலங்கை அரசாங்கம் திருந்துமா? இலங்கை வாழ தமிழ்ருக்கு உடனடி மறுவாழ்வு கிட்டுமா?  முள்வேலி முகாமிற்குள் வுள்ள எம் தமிழர் சொந்தவூருக்கு செல்ல அனுமதி கிட்டுமா? என்பது தெரியவில்லை.

ஆனால் இன்று இலங்கைக்கான ஊடகத்துரை அமைச்சர் லக்ஷ்மன் யப்பா
'அகதி மக்களை பார்வையிட வந்த சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பலவகையான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்தனர், அனால் இந்தியாவிலிருந்து வந்த எம் பி க்கள் குழுவினர் மட்டுமே எமது நாட்டின் நிலைமைகளை புரிந்துகொண்டு இலங்கைக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க வழிவகுத்தனர்.,
மேலும், இந்திய எம் பி க்களின் இலங்கை விஜயம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது அவர்களுக்குதமிழ்கத்தில் பல்வேறு அழுத்தங்கள் காணப்பட்டபோதும் மிகவும் யதார்த்தமாக நடந்துகொண்டனர்' என்றார்  (வீரகேசரி-21-10-2009).

ஆக, இப்போது சொல்லுங்கள் இந்த பயணம் சிங்களவனுக்கு பயனுள்ளதாக
அமைந்துவிட்டதாக அமைச்சரே சொல்கிறார்.
இவர்கள் போகாமலேயே இங்கிருந்து அழுத்தம் கொடுத்திருக்கலாமோ?

மொத்தத்தில் புண்பட்ட இலங்கைத்தமிழ்ர்களை மேலும் மேலும் புண்பட வைக்காதிர்கள். நமக்குள் ஒற்றுமை இல்லாதது மத்திய அரசுக்கும்., இலங்கை அரசுக்கும் கொண்டாட்டமாகிப் போய்விடுகிறது, இதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது.
>

0 comments:

Post a Comment