Wednesday, October 14, 2009

பதிவெழுதிப்பார் !













பதிவெழுதிப்பார்!
உலகில் விமர்சிக்க ஆயிரம் நிகழ்வுகள்
பின்னூட்டம் படித்தபின்னே
முன் யோசிக்க மறந்தது புரியும்



பதிவெழுதிப்பார்
புகழ்ந்து பேசுவதும்
புழுதிவாரி இறைப்பதும்
சுலபமாய் புரிந்துபோகும்



பதிவெழுதிப்பார்
விரிவாய் எழுதி ,வோட்டு பெற்ற பின்னும்
அதிகம் வேணும் என
ஆசை கொண்டு ஏங்கும்


பதிவெழுதிப்பார்
புதிய படைப்பு
புதிய யோசனை
புதுமை நடை
சிந்திதித்து சிந்தித்து
மண்டை வறண்டுபோகக் காண்பாய்



பதிவெழுதிப்பார்
பல நாட்டின் பதிவர்கள்
பைந்தமிழ் அன்பர்கள்
உன் பக்கம் வந்துபோவதும்
உன் நண்பராய் மாறிப்போவதும்
உன் பதிவை வைத்துதான்



ஆக,
பிறர் நேரம் வீணாக்காத
நல்ல பதிவு
நன்மை பதிவு
நாள் தோறும் தரவே
பதிவெழுதிப்பார் - அது வொரு அனுபவம்
>

0 comments:

Post a Comment