Sunday, October 25, 2009

அதிகமாய் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்களை., சாதனையில் விஞ்சிய சீன மாணவர்கள்

ஆமாங்க, அமெரிக்காவிற்கு அதிகமாய் படிக்க இந்தியா மாணவர்களை அனுப்புகிறது.,ஆனால் அறிவியல் மற்றும் இன்ஜினீரிங் படிப்பில் சீன மாணவர்கள் அதிகம் சாதிப்பதாக புள்ளிவிபரம் காண்பிக்கிறது.,கிழே இன்று வெளிவந்த செய்தியை படியுங்கள்., நமது நாட்டில் அப்போதிலிருந்தே மனப்பாடம் செய்து பரிட்சையில் அப்படியே கொட்டி எழுதி மார்க் வாங்கி படிக்கும் பழக்கத்தினால் ,வெளிநாடு செல்லும் மாணவர்கள் அவர்கள் சொந்த மாக யோசித்து எழுத சொல்லும் கட்டுரை மற்றும் ஆராய்ச்சியில் அதிக அனுபவமின்மையால்
சொதப்பி விடுவதால் தான் பின் தங்கி விடுகிறார்கள் என்பது என் சொந்த கருத்து., இனி வரும் காலங்களில் வெளிநாட்டினரும் வியக்கும் வண்ணம் நமது கல்வித்திட்டங்களை , மாற்றி அமைத்தால், இங்கு அமெரிக்க, சீன மாணவர்கள் கூட வந்து படிக்க வாய்ப்பிருக்கிறது.. எனினும்  தற்ப்போது கல்வித்துறையில் செய்து வரும் மாற்றங்களும் ,ஊக்குவிப்புகளும் பலன் தர சில,பல  ஆண்டுகள் ஆகும்   

இனி இன்றைய பத்திரிகை செய்தி கிழே:-


புதுடில்லி : அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க அதிக மாணவர்களை அனுப்புவதில் சீனாவை இந்தியா மிஞ்சி வருகிறது; ஆனால், அங்கு அறிவியல், இன்ஜினியரிங் உட்பட பல படிப்புகளில் சாதிப்பது என்னவோ சீனா தான்.

அமெரிக்காவில், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று இந்திய மாணவர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப, சமீப ஆண்டுகளில் அதிக அளவில் மாணவர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதிலும் இந்தியாவுக்கு சவாலாக இருப்பது சீனா தான்.பொறியியல், அறிவியல் இரண்டிலும் மேற்படிப்புக்கு அதிக மாணவர்கள் அமெரிக்காவுக்கு செல்வதில், இந்தியாவுக்கு சமமாக சீனா இருந்து வருகிறது. ஆனால், சமீப ஆண்டுகளில் இதிலும், சீனா மிஞ்சி வருகிறது என்ற தகவல் வெளியாகி உள் ளது.கடந்த சில ஆண்டுகளில், பொறியியல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் தான். அதே சமயம், பொறியியல் படிப்புகளில் ஆராய்ச்சி செய்வதிலும், டாக்டர் பட்டம் பெறுவதிலும் சீன மாணவர்கள் தான் முன்னணியில் உள் ளனர் என்று தெரியவந்துள்ளது.

பொறியியல் மட்டுமின்றி, அறிவியல் படிப்புகளில் இந்தியாவை சீனா மிஞ்சி விட்டது. இந்தியாவை விட, இரண்டரை மடங்கு அதிகமாக சீன மாணவர்கள் அமெரிக்காவில் இந்த படிப்புகளில் படிக்கின்றனர். அறிவியல் ஆராய்ச்சிகளிலும் சீனர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.இந்திய அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்ற அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இது தொடர்பாக பல தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன.அதில் கூறியிருப்பதாவது:அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க கடந்த 1998ல் இந்தியாவில் இருந்து 26 ஆயிரம் மாணவர்கள் சென்றனர்; அப்போது, அமெரிக்கா சென்ற சீன மாணவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரம்.

ஆனால், 2005ல், இரு நாடுகளும் சம அளவில் மாணவர்களை அனுப்பி வைப்பதில் போட்டி போட்டன.கடந்த 2007ல், அமெரிக்காவுக்கு சென்ற இந்திய மாணவர் கள் எண்ணிக்கை 85 ஆயிரம்; சீனாவில் இருந்து சென்ற மாணவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரம். இந்த அளவுக்கு போட்டாபோட்டி வலுத்தது.கடந்த 1985 முதல் 2005 வரை, அமெரிக்காவில், பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற இந்திய மாணவர்கள் எண் ணிக்கை 8,100; அதே சமயம், சீன மாணவர்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் 12 ஆயிரம் பேர்.அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற இந்தியர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 800; சீன மாணவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரம்.

அதாவது, பொறியியல் மாணவர்களை அதிகம் அனுப்புவது இந்தியா தான்; ஆனால், தகுதி சார்ந்த பட்டங்கள் பெறுவதில் சீன மாணவர்கள் முதலிடம்; அதுபோல, அடிப்படை அறிவியலிலும் அதிகம் சாதிப்பது சீனர் கள்தான்.இதற்கு காரணம், அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கப்போகும் அளவுக்கு மாணவர்களை தகுதிப்பெறச் செய்வதில் இந்தியாவை விட, சீனா தான் அதிக கட்டமைப்பு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வித் துறையில் தனியார் முதலீடு அதிகம் என்பதும் முக்கிய காரணம்.இது, இன்று நேற்றல்ல, 30 ஆண்டாகவே கல்வித்துறையில் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி வந்துள்ளது. அதனால், தகுதி வாய்ந்த படிப்புகளை முடித்த சீன மாணவர்கள், முழு தகுதியுடன் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கச் செல்கின்றனர்; அவர்களால் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட முடிகிறது.

நானோ டெக்னாலஜி, பயாலஜி உட்பட பல அறிவியல் துறைகளில் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சீன மாணவர்கள் தான் தொ டர்ந்து சாதித்த வண்ணம் உள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியா இப்போது தான் கல்வித்துறையில், அதிலும் அறிவியல் துறையில் முழு அக்கறை காட்டி, பல திட்டங்களை போட்டு, மாணவர்களை ஊக்கப் படுத்தி வருகிறது. புதிய ஐ.ஐ.டி.,க்கள் உருவாகி உள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் இதன் பலன்கள் கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
>

4 comments:

புலவன் புலிகேசி said...

நல்ல ஆரோக்கியமான போட்டி தான்

Unknown said...

<<<
சொந்த மாக யோசித்து எழுத சொல்லும் கட்டுரை மற்றும் ஆராய்ச்சியில் அதிக அனுபவமின்மையால்
சொதப்பி விடுவதால் தான் பின் தங்கி விடுகிறார்கள் என்பது என் சொந்த கருத்து
>>>

உண்மை.

நமது படிப்பு அப்படிதானே இருக்கு. :(

இங்கு ஒப்பித்தலைதான் விரும்புகின்றனர்.

அகல்விளக்கு said...

இதிலாவது வெல்வோம் சீனர்களை

அகல்விளக்கு said...

word verification remove pannunga

Post a Comment