Thursday, October 29, 2009

தமிழக மீனவர்களும், அக்கறையில்லா அரசும்




இப்போதெல்லாம் அடிக்கடி தினசரிகளில் நமது மீனவர்கள் , இலங்கை கடற்ப்படையினரால் படும் தொல்லைகள் வெளிவந்துகொண்டே இருக்கிறது.
அவர்களின் வலைகள் அறுக்கப்படுகின்றன, படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன,  பிடித்த மீன்களைக்கூட விடுவதில்லை. அவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன .(இன்றைய செய்தியில் கூட நேற்று கடலுக்குச்சென்ற மீன்பிடி படகை கடற்படை படகால் இடித்து சேதம் செய்துள்ளனர்)

இந்தியா இந்த பிராந்தியத்தில் பெரிய பலம வாய்ந்த நாடாக இருந்தும் தன் சொந்த குடிமக்களுக்கு கடலில் ஏற்படும் தொல்லைகளுக்கு எதிராக
எதுவும் செய்வதில்லை, ஆட்சியில் உள்ளவர்களும் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதே இல்லை.

மிகவும் பலம வாய்ந்த கடற்படை இருந்தும்., இலங்கை கடற்ப்படையினர் செய்யும்
அட்டூழியங்களிலிருந்து மீனவர்களை காப்பற்ற முடியவில்லை.
நம் கடற்ப்பகுதிக்கே வந்து மீனவர்களை துன்புறுத்தும் இவர்களை நம் கடற்ப்படை
தட்டிக்கேட்க வேண்டாமா? அவர்களை விரட்டி விட வேண்டாமா? இதை வேடிக்கை பார்க்கவா கடற்ப்படை வைத்திருக்கிறார்கள். இதைக்கூட செய்ய முடியாத கடற்ப்படை சுற்றுக்காவல் புரிந்து என்ன பயன்?
சின்னஞ்சிறு நாடான இலங்கையே விளையாட்டுக்காட்டும்போது .,சீனா, போன்ற பெரிய நாடுகள் வம்புக்கிழுத்தால்., இப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா?
பாதுகாப்பில்லாத கடற்ப்படையினரால் தான் பாகிஸ்தான்காரன் கடல் வழி வந்து தாக்கினான்., இப்போது இலங்கைக்காரனும் கிட்டத்தட்ட தினமும் மீனவர்களை தாக்கிக்கொண்டிருக்கிறான்.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை.., இனியாவது தாமதம் செய்யாமல்
கடிதம், தந்தி, போராட்டம் என்று செல்லாமல் அட அட்லீஸ்ட் இலங்கைத்தூதுவரை கூப்பிட்டு கண்டனம் செய்தாலாவது இவர்கள் வால்த்தனம்
நிற்குமல்லவா? செய்வார்களா? 


>

2 comments:

ttpian said...

தமிழ் செம்மொழி:
கனிமொழி என் மகள்
அழகிரி மந்திரி
மஞசள் துண்டு:கதை விசனம்
மீனவன் இருந்தால் என்ன? செத்தால் என்ன?
தமிழ் வழ்க:மு.க வாழ்க!
மு.க மனைவிகள் வாழ்க!

புலவன் புலிகேசி said...

//அட்லீஸ்ட் இலங்கைத்தூதுவரை கூப்பிட்டு கண்டனம் செய்தாலாவது இவர்கள் வால்த்தனம்
நிற்குமல்லவா? செய்வார்களா? //

இவனுங்களுக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தல.......எங்க இத செய்யப் போறானுங்க...

Post a Comment